Don't Miss!
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்னையில் சில்லிங்: விஷ்ணு விஷாலுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட ஜுவாலா
Recommended Video
சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா சென்னையில் நண்பர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் நல்ல நண்பர்கள் ஆவர். அவர்களுக்கு பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வது உண்டு.
இந்நிலையில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஜுவாலா சென்னை வந்துள்ளார். சென்னை வந்த இடத்தில் நண்பர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Chilling in Chennai...🙂💥🤟🏻 pic.twitter.com/YyChLO3z9x
— Gutta Jwala (@Guttajwala) June 27, 2019
ஜுவாலா கட்டா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், சரி காதல் உறுதியாகிவிட்டது. அடுத்து என்ன கல்யாணமா, வாழ்த்துக்கள் சகோதரி என்று வாழ்த்தியுள்ளனர். சிலரோ, உங்களால் தான் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ரஜினியை பிரிந்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக விஷ்ணு விஷால் ஜுவாலாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேசியதுடன், கண்டபடி விமர்சித்தார்கள். இந்த பொம்பளைக்காகவா மனைவியை பிரிவது, தவறு செய்கிறீர்கள் விஷ்ணு விஷால் என்று எச்சரித்தனர்.
ஜுவாலாவுக்கும், எனக்கும் இடையே இருப்பது நட்பு மட்டுமே என்று விஷ்ணு விஷால் அளித்த விளக்கத்தை ஏற்க யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஜுவாலா வெளியிட்ட புகைப்படத்தால் அவர்கள் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று நெட்டிசன்களாக ஒரு முடிவுக்கு வந்தவிட்டார்கள்.
இது விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதை மறந்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள். ஜுவாலாவை எப்படி கரெக்ட் செய்தீர்கள், மனைவியை விரட்டிவிட்டு இவரோடு சில்லிங்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்தாலும் அது அவரின் சொந்த விஷயம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதை நெட்டிசன்கள் ஒருபோதும் மனதில் கொள்வது இல்லை.
விஷ்ணு விஷால் மனைவியை பிரிந்த போதிலும் அவருடன் நட்பாகவே பழகி வருகிறார். மகன் ஆர்யனுக்காக இருவரும் நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.