Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்
Recommended Video
சென்னை: ஜோதிகா அடுத்த படத்தில் டீச்சராக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை டீச்சர் கதாபாத்திரம் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. பாரதிராஜா படங்களில் வந்த குடைபிடிக்கும் டீச்சரிலிருந்து, நாட்டாமை டீச்சர், குற்றம் கடிதல் படத்தில் வந்த கண்டிப்பான டீச்சர் என சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் அமலா பால் கூட ராட்சசன் படத்தில் டீச்சராக நடித்திருந்தார்.
அந்த வகையில் நடிகை ஜோதிகா மீண்டும் டீச்சர் அவதாரம் எடுக்க உள்ளார். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. அதில் சிவகுமார், சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்க உள்ளாராம். அதற்காக சென்னையில் ஒரு பள்ளியின் செட் போடப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரமே படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.