Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தம்பி படம் ரெடி.. கையோடு ஜோ.வின் அடுத்த படத்துக்கு பூஜை போட்ட சூர்யா.. ஹீரோ யார் தெரியுமா?
ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடிக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜோதிகா, சசிகுமார் சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம். அடுத்ததாக இந்நிறுவனம் ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடிக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்கிறது.
அப்படத்தின் பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று நடத்தப்பட்டது. அதில், நடிகர்சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை டி. இமான்.
இந்த முறை லண்டனில் வேட்டை.. துப்பறிவாளன் 2 குறித்த துப்புக் கொடுத்த பிரசன்னா!
இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் ஜோதிகாவும், கார்த்தியும் முதல்முறையாக சேர்ந்து நடித்துள்ள தம்பி படம் ரிலீசாக இருக்கிறது. அப்படத்தில் ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.