Don't Miss!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பையன்... பத்திரிகையாளர் பாலனின் இரண்டாவது படம்.. முதல் பாடலை வெளியிட்ட பாக்யராஜ்!
பத்திரிகையாளர், பத்திரிகைத் தொடர்பாளர் என பணியாற்றிய பாலன், தனது இரண்டாவது படத்தை முடித்துவிட்டார்.
படத்தின் பெயர் பையன்.
படம் குறித்து பாலன் என்கிற பாலு மலர்வண்ணன் இப்படிச் சொல்கிறார்:
கருத்துள்ள ஒரு அருமையான படமாக ‘பையன்' படத்தை எடுத்திருக்கிறேன். படத்தைப் பார்க்கும் போது ஒரு பத்திரிகையாளன் எடுத்தப் படம்டா என்று சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்கிற மாதிரியான படமாகத்தான் இருக்கும் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது படத்தை முடித்து மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக முதலில் பாடல் வெளியிடும் வேலையில் இறங்கி இருக்கிறேன்.
பி.எஸ்.ராகுல் என்கிற மீடியா நண்பர் ஒருவரை இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அவரிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இது நடந்திருக்கிறது.
எனது முயற்சிக்கு பங்கெடுத்த எனது நண்பரும், படத்தின் தயாரிப்பாளருமான டி.மதுராஜ், 'பாத்து பாத்து...'' என்று துவங்குகிற ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ‘ஊதா கலரு ரிப்பன்...' பாடலின் மூலம் புகழ் பெற்ற ஹரிகரசுதன் அந்தப் பாடலை பாடி இருக்கிறார்.
மிக அற்புதமாக உருவாக்கியுள்ள இந்தப் பாடலை நீங்கள் கேட்க வேண்டும். இந்தப் பாடல் குறித்த உங்கள் ஆலோசனைகளை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.
இன்று (14.12.2015) இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான மதுராஜின் குருநாதர், கே.பாக்யராஜ் முதல் பாடலை வெளியிட, பாலனின் குருநாதர் டைமண்ட் பாபு பெற்றுக் கொண்டார். பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி வாழ்த்திப் பேசினார்.