Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குனர் கே.பாக்யராஜ் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
Recommended Video
சென்னை: சர்கார் விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்த இயக்குநர் கே.பாக்யராஜ், மீண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
சர்கார் திரைப்படத்தின் கதை விவகாரத்தில் மிக அழுத்தமாக செயல்பட்டவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ். இதன் காரணமாகவே அந்த பதவியை அவர் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.
ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என சக நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவர் ஆவேன் என பாக்யராஜ் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேரும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். பாக்யராஜ் தலைவராக இல்லாத சங்கத்தில் தாங்கள் நிர்வாகிகளாக இருக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துவிட்டனர்.
சக நிர்வாகிகளின் முடிவை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் தனது முடிவை மாற்றிக்கொண்டார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, எழுத்தாளர் சங்க விவகாரம் குறித்து கே.பாக்யராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது தான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அவர் உறுதி செய்தார்.