Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தூக்குக் கயிறோடு எஸ்ஏசியைத் தேடும் கே ராஜன்!
தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள எஸ்ஏ சந்திரசேகர், கலைப்புலி தாணு உள்ளிட்டோரை கடுமையாக எதிர்த்து வருகிறது, கேயார் தலைமையிலான அணி.
இதனால் வாரம் ஒரு முறை எஸ்ஏசி அணி நிருபர்களைச் சந்திப்பதும், அந்த சந்திப்புக்கு வரும் நிருபர்களை அப்படியே வழி மறித்து கேயார் அணி சந்திப்பதும் தொடர்கிறது.
நேற்று முன்தினமும் இந்த சந்திப்பும் வழி மறிப்பும் தொடர்ந்தது.
இதில் முன்னதாக நிருபர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன், "பொறுப்புக்கு வந்ததிலிருந்து எங்களை வேலை செய்யவே விடலா எதிர்த் தரப்பு. எப்பப் பார்த்தாலும் புகார், வழக்குன்னு தொந்தரவு கொடுத்துட்டே இருக்காங்க. அவங்கள மாதிரி கள்ள ஓட்டுப் போட்டு ஜெயிச்சவங்க நாங்க இல்ல.." என்றார்.
பிரஸ் மீட் முடிந்ததும் வெளியே வந்த நிருபர்களை, அப்படியே அந்த ஹாலுக்கு வாங்க என்று கூட்டிச் சென்ற கேயார் மற்றும் ராஜன், "சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார் எஸ் ஏ சந்திரசேகரன். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாலு முழக் கயித்துல தொங்கிடறேன்னு சொன்னாரு. இப்ப தூக்குக் கயிறு இருக்கு... தொங்கறதுக்கு எஸ்ஏசியைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்," என்றார் படு காட்டமாக.
என்னது... ஒரே கொல வெறியால்ல இருக்கு!