twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூக்குக் கயிறோடு எஸ்ஏசியைத் தேடும் கே ராஜன்!

    By Shankar
    |

    SA Chandrasekar
    சென்னை: சின்னப்படத் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தூக்கில் தொங்குவதாகக் கூறினார் சங்கத் தலைவர் எஸ்ஏசி. தூக்குக் கயிறு இருக்கு.. எஸ் ஏ சியைத்தான் காணோம், என்கிறார் தயாரிப்பாளர் சங்க எதிரணியைச் சேர்ந்த கே ராஜன்.

    தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள எஸ்ஏ சந்திரசேகர், கலைப்புலி தாணு உள்ளிட்டோரை கடுமையாக எதிர்த்து வருகிறது, கேயார் தலைமையிலான அணி.

    இதனால் வாரம் ஒரு முறை எஸ்ஏசி அணி நிருபர்களைச் சந்திப்பதும், அந்த சந்திப்புக்கு வரும் நிருபர்களை அப்படியே வழி மறித்து கேயார் அணி சந்திப்பதும் தொடர்கிறது.

    நேற்று முன்தினமும் இந்த சந்திப்பும் வழி மறிப்பும் தொடர்ந்தது.

    இதில் முன்னதாக நிருபர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன், "பொறுப்புக்கு வந்ததிலிருந்து எங்களை வேலை செய்யவே விடலா எதிர்த் தரப்பு. எப்பப் பார்த்தாலும் புகார், வழக்குன்னு தொந்தரவு கொடுத்துட்டே இருக்காங்க. அவங்கள மாதிரி கள்ள ஓட்டுப் போட்டு ஜெயிச்சவங்க நாங்க இல்ல.." என்றார்.

    பிரஸ் மீட் முடிந்ததும் வெளியே வந்த நிருபர்களை, அப்படியே அந்த ஹாலுக்கு வாங்க என்று கூட்டிச் சென்ற கேயார் மற்றும் ராஜன், "சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார் எஸ் ஏ சந்திரசேகரன். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாலு முழக் கயித்துல தொங்கிடறேன்னு சொன்னாரு. இப்ப தூக்குக் கயிறு இருக்கு... தொங்கறதுக்கு எஸ்ஏசியைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்," என்றார் படு காட்டமாக.

    என்னது... ஒரே கொல வெறியால்ல இருக்கு!

    English summary
    K Rajan, key member of producer council strongly condemned Vijay's father SAC for his wrong commitment to small producers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X