Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தம்பி அஜீத், விஜய்.. குடிக்காதீங்கப்பா! - கே ராஜன்
சென்னை: அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் குடிப்பது மாதிரி நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே ராஜன் கேட்டுக் கொண்டார்.
கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் "வீரன் முத்துராக்கு".
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார். ஷண்முகராஜன், ஆடுகளம் நரேன், நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், அஜீத் - விஜய் இருவருக்கும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் பேசுகையில், "இப்போதெல்லாம் படங்களின் வெற்றி என்பது குறுகி விட்டது. சென்ற வருடம் 175 படங்கள் ரிலீஸானது அதில் 12 படங்கள் தான் வெற்றி பெற்றது. சினிமாவில் எப்பொழுதுமே நல்ல கதையுள்ள படங்கள் மட்டும்தான் வெற்றி பெறும்.
நட்சத்திர நடிகர்களுக்காக படங்கள் ஓடுவதில்லை இந்த வருட ஆரம்பத்தில் கூட நட்சத்திர அந்தஸ்து இல்லாத சின்ன பட்ஜெட் படங்கள் ஓடி இருக்கிறது.
இப்போது ஒரு படம் வெற்றி பெற்றவுடன் அந்த கதாநாயகன் கேட்கிற சம்பளம்... அப்பாடா.. மூன்று கோடி நான்கு கோடி... என்கிறார்.
தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தும்படியான சம்பளத்தை கேட்காதீங்கப்பா... நியாயமாக சம்பளம் கேளுங்க.
கோடிக்கணக்கில் சம்பளம் யாருக்காக வாங்குகிறீர்கள் வயதான காலத்தில் பணத்தை சாப்பிட முடியாது. மூன்று வேளை கூட சாப்பிட முடியாது ஒரு வேளை மாத்திரைதான் சாப்பாடாகி விடுகிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் சம்பாதித்ததை தானம் செய்தார். ரசிகர்கள் அதிகமானார்கள். மேலும் சம்பாதித்தார்...மேலும் தானம் செய்தார். இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பேசும் தெய்வம் என்ற படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 'படம் தான் சூப்பர் ஹிட் ஆக ஓடுதே... 25000 ரூபாய் அதிகமாக தரக்கூடாதா?' என்று அன்பான வேண்டுகோள்தான் வைத்தார்.
இன்று உள்ள ஹீரோக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயாரிப்பாளரை வாழ வைத்து நீங்களும் வாழுங்கள்.
அதே மாதிரி அஜீத் - விஜய் இருவருக்கும் ஒரு வேண்டுகோள். சமீபத்திய உங்கள் படங்களில் நீங்கள் மது குடிப்பது மாதிரி காட்சிகளில் நடிக்கிறீர்கள் நம்ம தல, தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க... நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும்.
அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள்.
அடுத்தவங்களை அழித்துத்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? யோசியுங்கள்," என்று வேண்டுகோள் வைத்தார்.