Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிக்கெட், பார்க்கிங் கட்டணத்தை இப்படி வச்சிருந்தா எவன்யா படம் பார்க்க வருவான்? -கே.ராஜன்
தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் ஏழை மக்கள் படம் பார்க்க வர மறுக்கிறார்கள், என்றார் தயாரிப்பாளர் கே ராஜன்.
54321 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, "நான் நல்ல விஷயம் பேசினால் அதை பெரிதுபடுத்தி பிரச்சினையாக்கி விடுகிறார்கள். அதனால் என்னை யாரும் அழைப்பது இல்லை. அதுக்காக நான் கவலப்படல. என் ஸ்கூல் வேலைய பாக்கவே நேரம் சரியா இருக்கு.
இப்போதெல்லாம் யாரும் மனுஷனை நம்பிப் படமெடுப்பதில்லை. பேய் பிசாசை நம்பி எடுக்கிறார்கள். பேய், பிசாசுதான் படங்களை ஜெயிக்க வைக்கிறது. ராம நாராயணன் இருபது -முப்பது படங்கள் குரங்கு நாயை நம்பி எடுத்தார். வெற்றியும் பெற்றார்.
இன்று ஏழைகள் யாரும் தியேட்டருக்கு வருவது இல்லை. டிக்கெட் 110 ருபாய் 5 பேர் தியேட்டருக்கு போனால் 550 ஆகிறது. ஒரு தியேட்டரில் பார்க்கிங் மணிக்கு 50 ரூபாய் வாங்குகிறான். படத்துக்கு டிக்கெட்110 ரூபாய். மூன்று மணி நேர பார்க்கிங் 150 ரூபாய் அப்புறம் எப்படி தியேட்டருக்கு ஏழைகள் வருவான்? பாப்கார்ன், கோகோ கோலாவுக்கு 150 ரூபாயாம். அதனால எவனும் வர பயப்படுகிறான். டிக்கெட் விலை குறையவேண்டும். 'டிமாண்டி காலனி' படம் ஓடுது. மவுத் டாக் பரவுது.
கோடி ரூபாய் விளம்பரத்தை விட வாயால் பரவும் மவுத் டாக் தான் பெரிய பப்ளிசிடி.
இப்போதெல்லாம் படம் நன்றாக இல்லை என்றால் 'மச்சி உள்ளே வராதே' என்று பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தட்டி விடுகிறான். இப்படி மவுத் டாக் அதிகமாக பரவுகிறது.
நான் திருட்டு விசிடியை எதிர்த்து போராடினேன். திருட்டு விசிடியை விற்கிறவன் சுகமாக இருக்கிறான். நான் கஷ்டப்பட்டேன்.
இப்படத்தை சிக்கனமாக எடுத்துள்ளார்கள்.
நம் படங்களில் ஒரு கதாநாயகனை அடிக்க ஐநூறு பேர் கத்தியோடு வருவார்கள். ஐந்து ஐந்து பேராக அடி வாங்கிவிட்டு போவார்கள். இவை எல்லாம் தேவையில்லாத செலவுகள். இந்த '54321' படத்தில் ஒரு பாடல் காட்சியில் இரண்டு பேரை மட்டும் வைத்து ஒரே ரூமில் முடித்துள்ளார்கள். பின்னாடி கூட்டமாக ஆடும் பெண்கள் எல்லாம் இல்லை. சிக்கனமாக எடுத்துள்ளார்கள். நான் இவர்களைப் பாராட்டுகிறேன்,'' என்றார்.
தொடர்ந்து படத்தின் பாடலை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தினர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் பாபி சிம்ஹா, அர்வின், ஜெயக்குமார், சபீர், இயக்குநர்கள் மனோஜ்குமார், கே.எஸ். அதியமான், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் '54321' படத்தின் இயக்குநர் ராகவேந்திர பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் தயாரிப்பாளர்கள் ராஜா, ஜி.வி.கண்ணன் இருவரும் நன்றி கூறினார்கள்.