Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோச்சடையானிலிருந்து நான் நீக்கமா.. என்ன விளையாடறீங்களா? - கேஎஸ் ரவிக்குமார்
'கோச்சடையான்' படத்திலிருந்து கேஎஸ் ரவிக்குமார் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மாதேஷ் பணிபுரிகிறார் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அந்த செய்திகளை கே எஸ் ரவிக்குமார் மறுத்துள்ளார்.
'மும்பையில் சஞ்சய் தத்தை வைத்து நான் இயக்கிவரும் இந்திப்படத்தில் பிசியாக இருப்பதால், நான் நீக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை தாமதமாக நேற்றுதான் படித்தேன். கோச்சடையான் படத்துக்காக சவுந்தர்யாவுடன் லண்டன், கேரளாவில் நடந்த படப்பிடிப்புகளில் முழுக்க நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
எனது இந்திப் படத்தில் பிஸியாக இருப்பதால் எடிட்டிங் போன்ற போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதை நான் சவுந்தர்யாவிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஒருவேளை அதனால் மாதேஷின் உதவியை நாடியிருக்கக் கூடும். ஆகவே கே.எஸ்.ரவிக்குமாராகிய நான் தான் இப்போதும் படத்தின் மேற்பார்வை இயக்குனர். உதவி என்று வேண்டுமானால் மாதேஷின் பெயரைப் போட்டுக்கொள்ளட்டும்,' என்றார்.
சரீ... படப்பிடிப்பு முடிஞ்சதா இல்லையா... படத்தை இந்த தேதியில் கொண்டு வருகிறோம் என திரும்பத் திரும்ப தேதிகளை மாற்றிக்கொண்டிருப்பது ஏன்?