Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்து சுதீப்பை இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்!
லிங்கா படத்தில் ரஜினியை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார், அடுத்து சுதீப்பை வைத்து புதிய படம் இயக்குகிறார்.
‘லிங்கா'வை இயக்கியது முழு திருப்தியைத் தந்ததாகக் கூறும் ரவிக்குமார், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் உருவாகும் அந்த படத்தில் சுதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
லிங்கா படம் தொடங்குவதற்கு முன்பு சுதீப்பை வைத்துதான் படம் செய்வதாக இருந்தார் ரவிக்குமார். அட்வான்சும் வாங்கிவிட்டார். ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால், முதலில் லிங்காவை முடியுங்கள், காத்திருக்கிறோம் என சுதீப் சொல்லிவிட்டார்.
இப்போது தன் அடுத்த படத்தில் சுதீப்பை வைத்து பிரமாண்டமாய் உருவாக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்.
இது குறித்து கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், "அடுத்த படம் சுதீப்புடன்தான். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகுதான் வேறு படங்களில் கமிட் ஆகப் போகிறேன்," என்றார்.