அடுத்து சுதீப்பை இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்!
லிங்கா படத்தில் ரஜினியை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார், அடுத்து சுதீப்பை வைத்து புதிய படம் இயக்குகிறார்.
‘லிங்கா'வை இயக்கியது முழு திருப்தியைத் தந்ததாகக் கூறும் ரவிக்குமார், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் உருவாகும் அந்த படத்தில் சுதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லிங்கா படம் தொடங்குவதற்கு முன்பு சுதீப்பை வைத்துதான் படம் செய்வதாக இருந்தார் ரவிக்குமார். அட்வான்சும் வாங்கிவிட்டார். ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால், முதலில் லிங்காவை முடியுங்கள், காத்திருக்கிறோம் என சுதீப் சொல்லிவிட்டார்.
இப்போது தன் அடுத்த படத்தில் சுதீப்பை வைத்து பிரமாண்டமாய் உருவாக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்.
இது குறித்து கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், "அடுத்த படம் சுதீப்புடன்தான். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகுதான் வேறு படங்களில் கமிட் ஆகப் போகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











