Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காலா 45 நிமிடக் காட்சிகள் பேஸ்புக்கில் லைவ்.. சிங்கப்பூரில் ஒருவர் கைது!
பேஸ்புக்கில் காலா படத்தை லைவ்வாக ஒளிபரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சிங்கப்பூர்: ரஜினியின் காலா படத்தை பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பிய நபரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ரிலீசாகியுள்ளது. தமிழகத்தில் நாளை (7ம் தேதி) ரிலீசாகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை முதல் ஷோ பார்த்த பிரவீன் என்ற இளைஞர், திரையரங்கில் இருந்தபடியே படத்தை லைவ்வாக 45 நிமிடங்கள் பேஸ்புக்கில் ஒளிபரப்பினார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து அந்நாட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரவீனை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
காலா படத்தின் முதல் ஷோ தியேட்டரில் வெளியாகும் முன்னரே, அதனை இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்தது திரையுலகில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரவீன் ஏன் அவ்வாறு காலா படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. தொடர்ந்து போலீசார் அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.