Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தொடங்கியது காலா படப்பிடிப்பு... ஃபெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற, ரஜினி நடித்தார்!
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பிறகு ஃபெப்சி தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். நேற்று ஃபெப்சி தொழிலாளர்களுடன் காலா படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
தயாரிப்பாளகர்களுடன் சம்பள பிரச்சினையில் மோதல் ஏற்பட்டதால் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கடந்த 1-ந் தேதி முதல் இந்த போராட்டம் நடந்தது. ரஜினிகாந்தும், பிற முக்கியஸ்தர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இரு தரப்பினரையும் வற்புறுத்தியதால் பெப்சி தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
காலா
இதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கின. 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த காலா படப்பிடிப்பும் நேற்று தொடங்கியது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள படப்பிடிப்பு தளத்தில் மும்பையில் உள்ள தாராவி பகுதியை அரங்குகளாக அமைத்து காலா படப்பிடிப்பை நடத்தினர்.
ரஜினி நடித்தார்
‘லைட்மேன்' முதல் ஒளிப்பதிவாளர்கள் வரை அனைத்து பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்புக்கு வந்து பணிகளை தொடங்கினார்கள். நடிகர் ரஜினிகாந்தும் ‘மேக்கப்' போட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இருந்தார். ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கினார்.
ஃபெப்சி தொழிலாளர் மட்டுமே
தயாரிப்பாளர்கள் விரும்பினால் பெப்சி தொழிலாளர்கள் தவிர வேறு தொழிலாளர்களையும் படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால் காலா படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்தார்கள். வெளியாட்கள் அழைக்கப்படவில்லை.
விஷால் படத்திலும்
விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பை 3 நாட்களாக வெளியாட்களை வைத்து நடத்தினார்கள். நேற்று பெப்சி தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அவர்களையும் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டனர். இதுபோல் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நேற்று மீண்டும் தொடங்கின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்றார்கள்.