Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடுத்தடுத்து 2 வருது.. சூர்யா ரசிகர்களே.. ரசித்து மகிழ நீங்க ரெடியா?
சென்னை: ஒன்றரை ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் புதுப்படம் ஏதும் ரிலீஸ் ஆகாத நிலையில், நொந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. இதற்கு அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூர்யா.
போன தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த என்ஜிகே திரைப்படம், செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிபோனது. இந்நிலையில் மே 31-ம் தேதி என்ஜிகே வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடையில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.
என்ஜிகே விற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், புத்தாண்டு அருகே காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும் என முன்னரே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சூர்யா. அப்படி பார்த்தால் ரிலீஸ் அறிவிப்பை முதலில்
வெளியிட்டது காப்பான் படம் தான்.
எது எப்படியோ... ஒன்றரை ஆண்டுகளாக சூர்யாவை திரையில் காணாத ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து இரு படங்களை கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சூர்யா.