புயலுக்கு மத்தியில் மெல்லிய தென்றலாய்.... ஹல்ல்லோ சொல்லும் ஜோதிகா!
ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Recommended Video

சென்னை: இந்திய சினிமாவையே மிரட்சிக்கு ஆளாக்கியிருக்கும் 2.0 படம் ரிலீசாகியிருக்கும் இந்த சூழலிலும் ஜோதிகா காற்றின் மொழி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரமாண்ட நாயகன் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என ஒரு மெகா கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் 2.0. உலகம் முழுவதும் சுமார் 10,500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகி இருக்கிறது.

தமிழ் நாட்டில் மட்டும் 500 திரையரங்குகளில் 2.0 படம் திரையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் திரைப்படமும் மீதமுள்ள திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே கடந்த 16ம் தேதி வெளியான ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் இன்னும் 75 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், "புயலுக்கு மத்தியில் தென்றலாய் காற்றின் மொழி", என குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகள் கழித்து, ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











