Don't Miss!
- News மோடிக்கு பிரச்சாரத்தில் பேச வேறு எதுவுமே இல்ல.. அதனால்தான் இப்படி பேசுகிறார்.. கார்கே கொந்தளிப்பு
- Sports IPL 2024 : பால்கனி அறை சர்ச்சை.. சிஎஸ்கே அணியில் நடந்தது என்ன? உண்மையை சொன்ன சின்ன தல சுரேஷ் ரெய்னா!
- Finance இனி கழுதை வளர்த்தே பொழச்சிக்கலாம் போலயே..கழுதை பால் ஒரு லிட்டர் இவளோவா?
- Technology Google Pay கதை க்ளோஸ்.. மொத்த இந்தியர்களுக்கும் வந்தது Google Wallet ஆப்.. இனி எல்லாமே இதுல தான் பண்ணனும்!
- Lifestyle ஒரு மணி நேர இடைவெளியில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
- Automobiles சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
புயலுக்கு மத்தியில் மெல்லிய தென்றலாய்.... ஹல்ல்லோ சொல்லும் ஜோதிகா!
ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Recommended Video
சென்னை: இந்திய சினிமாவையே மிரட்சிக்கு ஆளாக்கியிருக்கும் 2.0 படம் ரிலீசாகியிருக்கும் இந்த சூழலிலும் ஜோதிகா காற்றின் மொழி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரமாண்ட நாயகன் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என ஒரு மெகா கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் 2.0. உலகம் முழுவதும் சுமார் 10,500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகி இருக்கிறது.
தமிழ் நாட்டில் மட்டும் 500 திரையரங்குகளில் 2.0 படம் திரையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் திரைப்படமும் மீதமுள்ள திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே கடந்த 16ம் தேதி வெளியான ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படம் இன்னும் 75 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், "புயலுக்கு மத்தியில் தென்றலாய் காற்றின் மொழி", என குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகள் கழித்து, ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.