Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வில்லனா நடிச்சிட்டு இருந்தேன்... என்னைய ஹீரோயினா மாத்திடுச்சே இந்த 'காட்டேரி'!
வில்லன் நடிகர் ரவி மரியா காட்டேரி படத்தில் பெண்ணாக நடிக்கிறார்
சென்னை: காட்டேரி படத்தில் தானும் ஒரு ஹீரோயினாக நடிப்பதாக வில்லன் நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் டீகே இயக்கியுள்ள படம் காட்டேரி. வைபவ், சோனம் பஜ்வா, ரவி மரியா, பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் படத்தில் நடித்த கெட்டப்பிலேயே வந்திருந்தனர்.
பெண் கதாபாத்திரம்:
அப்போது பேசிய நடிகர் ரவி மரியா, இந்தப் படத்தில் தான் பெண்ணாக நடித்துள்ளதாகக் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது ," இந்த கெட்டப்பில் என்னை பார்த்தால் நிச்சயமாக சிரிப்பு வரும்.
ஒரு லட்சம் பரிசு:
இயக்குனர் டீகே இந்த படத்திற்கு சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கவே முடியாது. இதை நான் சவாலாகவே சொல்கிறேன். ஒருவேளை உங்களால் யூகிக்க முடிந்தால் நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்.
காட்டேரியின் வேலை:
காட்டேரி படத்தில் நான் தான் மூன்றாவது ஹீரோயின். சோனம் பஜ்வா என்னுடன் போட்டிபோட்டு நடித்தார். இந்த காட்டேரி என்னை பெண்ணாக மாற்றிவிட்டது. சொல்லப்போனால் அரை ரம்பாவாகவே என்னை மாற்றிவிட்டார்கள்.
வைபவ்:
ஆனால் ஹீரோ வைபவும், கருணாகரனும் ஹீரோயினுடன் என்னை நெருங்கவே விடவில்லை. நான் பேச போகும்போதெல்லாம் ஏதாவது காரணம் கூறி என்னை அனுப்பிக்கொண்டே இருந்தனர். இந்த பாவம் அவர்களை சும்மாவிடாது" என்றார்.