Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டும் விருது பெறாத காவியத் தலைவன்!
சென்னை: சோகப் படுவதா அல்லது துக்கப் படுவதா ஆனால் இரண்டில் ஒன்றைப் பட்டே ஆகவேண்டும். அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா நேற்று நடந்த 62 வது பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளாமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.
ஆனால் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட காவியத் தலைவன் படம் ஒரு விருதைக் கூடப் பெறவில்லை. இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை.
எப்படியாயினும் தமிழ் நாட்டில் வேகமாக அழிந்துவரும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நாடகக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காவியத் தலைவனை ஒரு பிரிவில் கூட கவுரவிக்காதது குறையே.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப்பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர் போன்ற 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது காவியத் தலைவன் . ஆனால் ஒன்றில் கூட விருதை வெல்லவில்லை.