Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டும் விருது பெறாத காவியத் தலைவன்!
சென்னை: சோகப் படுவதா அல்லது துக்கப் படுவதா ஆனால் இரண்டில் ஒன்றைப் பட்டே ஆகவேண்டும். அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா நேற்று நடந்த 62 வது பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளாமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.
ஆனால் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட காவியத் தலைவன் படம் ஒரு விருதைக் கூடப் பெறவில்லை. இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை.
எப்படியாயினும் தமிழ் நாட்டில் வேகமாக அழிந்துவரும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நாடகக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காவியத் தலைவனை ஒரு பிரிவில் கூட கவுரவிக்காதது குறையே.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப்பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர் போன்ற 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது காவியத் தலைவன் . ஆனால் ஒன்றில் கூட விருதை வெல்லவில்லை.