twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "கபாலி"க்கு சென்னையில் பிள்ளையார் சுழி.. அடுத்து மலேசியா பறக்கிறார்களாம்!

    By Manjula
    |

    சென்னை: ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பை சென்னையில் இருந்து துவங்க, இயக்குநர் பா.ரஞ்சித் முடிவு செய்திருக்கிறார்.

    சமீபத்தில் இப்படத்தின் போட்டோ ஷுட்டுகளை மிகவும் ரகசியமாக ஏவிஎம்மில் வைத்து ரஞ்சித் நடத்தியிருந்தார், படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரஜினி தோன்றவிருக்கிறார்.

    kabali First schedule Start in Chennai

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கப் போவதாக முன்பு அறிவித்திருந்தனர்,அதற்கான லொக்கேஷன்களை இயக்குநர் ரஞ்சித் தேர்வு செய்திருந்தார்.

    மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன்பின்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திவிட்டு, அடுத்தக்கட்டமாக மலேசியா புறப்பட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    அநேகமாக வருகிற விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரையுல வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அதற்கு முன்னதாக செப்டம்பர் 17-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளனர், படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம்.

    பிரிக்கவே முடியாதது ரஞ்சித்தையும், சென்னையையும் (திருவிளையாடல் பாணியில்.

    English summary
    First schedule of Superstar Rajinikanth’s Kabali will not be happening in Malaysia, as the film’s director Ranjith has decided to first complete scenes which are to be canned in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X