Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தளபதியும், நாயகனும் சேர்ந்ததுதான் கபாலி... ரஞ்சித்தைப் பாராட்டிய ரஜினி... தாணு நெகிழ்ச்சி!
சென்னை: கபாலி படம் தளபதியும், நாயகனும் சேர்ந்த படம் எனக் கூறி இயக்குநர் ரஞ்சித்தை ரஜினி பாராட்டியதாக தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 321 கோடியை வசூல் செய்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ரஜினியைத் தவிர்த்து இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு உட்பட கபாலி படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தாணு, "எனக்கும், ரஜினி சாருக்கும் கபாலி படத்திற்கான கதையை ரஞ்சித் சொல்லிமுடிக்கும்போது, எழுந்து நின்று கைதட்டினேன். ரஜினி இந்தக் கதையை அப்படியே படமாக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்தார்.
அதன் பிறகு நான் தயாரிப்பு சார்ந்து எதிலும் தலையிடவில்லை. அவர்களுக்கான சுதந்திரமே எங்களுக்கான வெற்றியாக அமைந்தது. முக்கியமாக டீசரில் ஹிட்டடித்த, தலையைக் கோதியபடி நடக்கும் காட்சியின்போது ரஜினிக்கு கொதிக்கும் ஃபீவர். ஆனால் அந்த நிலையிலும் சில காட்சிகள் நடித்தார். அந்த காட்சிகள் தான் இன்று பெரிய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது.
ரஜினி என்னிடம் பேசும்போது, "உனக்கும் எனக்கு உள்ள நட்பிற்கு கபாலி ஒரு கிரீடம், இந்தப் படத்த பாட்ஷானு எல்லோரும் சொல்லுறாங்க, ஆனா இந்தப் படம் தளபதியும், நாயகனும் சேர்ந்த ஒரு படம். ரஞ்சித் கிரேட்" என்று சொன்னது அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.