அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்றவங்க கிட்ட ரஜினி திரும்ப வந்துட்டார்னு சொல்லு.. கலக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியிருக்கும் கபாலி பாடல்களைக் கேட்டு, ரசிகர்கள் 'நெருப்புடா' என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ரஜினியின் நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நேரத்தில் கபாலி பாடல்கள் பற்றி நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

பஞ்ச பூதங்கள்
கபாலி பாடல்களை நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய பஞ்ச பூதங்களுடன் ஒப்பிட்டிருக்கிறார் அர்ஜுன்.
நெருப்புடா
ரஜினி நெருப்புப் போன்றவர் அவரை நெருங்க யாராலும் முடியாது என பிரசாந்த் கூறியிருக்கிறார்.
தமிழ்
ஆங்கிலம் பேசிய தமிழர்களை கபாலி பாடல்கள் தமிழ் பேச வைத்திருக்கிறது என சுரதா கூறியிருக்கிறார்.

அடுத்த சூப்பர் ஸ்டார்
அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்றவங்க கிட்ட ரஜினி திரும்ப வந்துட்டார்னு சொல்லு என்று பூபதி கிண்டல் செய்திருக்கிறார்.

வீட்டுக்காரம்மா
நெருப்புடான்ற வார்த்தையைக் கேட்கும்போது வீட்டுக்காரம்மா ஞாபகத்திற்கு வருவதாக செழியன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











