Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடலூரில் 650 பள்ளி மாணவிகளுக்கு கபாலி சிறப்புக் காட்சி
கடலூர்: கடலூரில் அரசு சேவை இல்லப் பள்ளி மாணவிகளுக்கு கபாலி திரைப்படம் தனிக் காட்சியாக திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்டது.
கபாலி படம் வெளியான முதல் மூன்று நாட்கள் பல்வேறு தனியார் நிறுவனங்கள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளித்து, டிக்கெட்டுகளையும் இலவசமாக வழங்கின. இதனால் அறிவிக்கப்படாத விடுமுறை தினங்களாக மாறின கபாலி வெளியான முதல் மூன்று நாட்கள்.
திங்கள் கிழமைக்குப் பிறகு குடும்பம் குடும்பமாக இந்தப் படத்தைப் பார்த்து வருகின்றனர். பல்வேறு சமூக நல அமைப்புகள் தங்கள் இல்லங்களில் தங்கியுள்ள மாணவிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்தப் படத்தைக் காட்டி வருகின்றன.
கடலூர் மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ், கடலூர் செம்மண்டலத்தில் அரசு சேவை இல்லப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளியான இங்கு சுனாமியால் பாதித்தோரின் குழந்தைகள், பெற்றோர், ஆதரவற்றோர் இல்லாத குழந்தைகள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்களின் குழந்தைகள் என சுமார் 150 பேர் வரை பயில்கின்றனர்.
மேலும், இங்குள்ள தங்கும் விடுதியில் சுமார் 500 பேர் தங்கி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை சேவை இல்லத்தில் தங்கிப் பயின்று வரும் சுமார் 650 மாணவிகளுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக, சேவை இல்லத்திலிருந்து மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். மேலும், விடுதிக் காப்பாளர்களும், ஆசிரியர்களும் உடன் சென்று திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.