Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஈழ தேவதை வாழ வாழவே...' - சிவப்பு படத்தில் கபிலன் வைரமுத்து பாடல்!
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நவீன் சந்திரா,ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்திருக்கும் படம் சிவப்பு. மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையே இப்படத்தின் மையம். ரூபா மஞ்சரி இலங்கைத் தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படத்தில் 'சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்...' என்று கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை ஹரிஹரன் பாடியிருக்கிறார். வரும் 16ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் வரிகள்...
பல்லவி
சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம் - என்
விடுகதை இரவு விடிவதை மறக்கும்
போர்க்கள பூமி வீசியெறிந்த
பூக்களில் ஒன்று பேசியதின்று
உனை சாய்த்த பள்ளங்களை
நிறைவாக மூடுகிறேன் - நீ
என் மனதோரம் நடந்துவர
ஒருவழிச்சாலை போடுகிறேன்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 1
மாயப் பெண்மையே தேடித் தேடி உனை
தீயில் தள்ளியே மறைந்தேனே
கண்கள் கண்டதொரு ஈரக்காட்சியால்
மண்டை நரம்புகள் நனைந்தேனே
அகதிக்கூடாரம் கடந்துவந்து என்
சகதி மனவெளியில் விழுந்தாயே
சகதி மனவெளியைப் புல்வெளியாக்கி
சிதறு பூக்களாய் நாடந்தாயே
ஈழ தேவதை வாழ வாழவே
தூய பாவங்கள் நான் புரிவேன்
விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து
அடிமைக் காயங்கள் ஆற்றிடுவேன்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 2
பாவை முன்னேறும் பாதை எங்கிலும்
பாவி முட்களைப் பொழிந்தேனே
காலம் காணாத கவிதை ஒன்றை
கப்பல் செய்திட நினைந்தேனே
வான மாளிகை தானனுப்பிய
மொத்த கர்வமென மொழிந்தேனே - உன்
சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும்
யுத்த சத்தங்கள் அறியேனே
நானறியாமல் என் சிறுமீசை
உந்தன் வாசலில் மண்டியிடும்
எனை கேட்காமல் என் குடை இனிமேல்
உனையும் உனையும் உள்ளடக்கும்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
பாடல் வரிகளுக்கான வீடியோ: