Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஈழ தேவதை வாழ வாழவே...' - சிவப்பு படத்தில் கபிலன் வைரமுத்து பாடல்!
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நவீன் சந்திரா,ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்திருக்கும் படம் சிவப்பு. மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையே இப்படத்தின் மையம். ரூபா மஞ்சரி இலங்கைத் தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படத்தில் 'சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்...' என்று கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை ஹரிஹரன் பாடியிருக்கிறார். வரும் 16ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் வரிகள்...
பல்லவி
சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம் - என்
விடுகதை இரவு விடிவதை மறக்கும்
போர்க்கள பூமி வீசியெறிந்த
பூக்களில் ஒன்று பேசியதின்று
உனை சாய்த்த பள்ளங்களை
நிறைவாக மூடுகிறேன் - நீ
என் மனதோரம் நடந்துவர
ஒருவழிச்சாலை போடுகிறேன்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 1
மாயப் பெண்மையே தேடித் தேடி உனை
தீயில் தள்ளியே மறைந்தேனே
கண்கள் கண்டதொரு ஈரக்காட்சியால்
மண்டை நரம்புகள் நனைந்தேனே
அகதிக்கூடாரம் கடந்துவந்து என்
சகதி மனவெளியில் விழுந்தாயே
சகதி மனவெளியைப் புல்வெளியாக்கி
சிதறு பூக்களாய் நாடந்தாயே
ஈழ தேவதை வாழ வாழவே
தூய பாவங்கள் நான் புரிவேன்
விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து
அடிமைக் காயங்கள் ஆற்றிடுவேன்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 2
பாவை முன்னேறும் பாதை எங்கிலும்
பாவி முட்களைப் பொழிந்தேனே
காலம் காணாத கவிதை ஒன்றை
கப்பல் செய்திட நினைந்தேனே
வான மாளிகை தானனுப்பிய
மொத்த கர்வமென மொழிந்தேனே - உன்
சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும்
யுத்த சத்தங்கள் அறியேனே
நானறியாமல் என் சிறுமீசை
உந்தன் வாசலில் மண்டியிடும்
எனை கேட்காமல் என் குடை இனிமேல்
உனையும் உனையும் உள்ளடக்கும்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
பாடல் வரிகளுக்கான வீடியோ: