Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கபீர் சிங் வெற்றியால் உச்சத்திற்குப் போன அர்ஜூன் ரெட்டி டைரக்டர் சந்தீப் ரெட்டி வங்கா
Recommended Video
மும்பை: கபீர் சிங் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மீண்டும் இந்தியிலேயே ஒரு திரைப்படத்தை இயக்கபோவதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் வசூல் மழையையும் கொட்டியது.
அதோடு இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் விஜய் தேவர கொண்டாவும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு என்றே தனியாக ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இந்த திரைப்படத்தையே இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் எடுத்தனர். இந்த திரைப்படத்தையும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இந்தி திரைத்துறையிலும் அறிமுகமானார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அதோடு மட்டுமின்றி இந்த ஆண்டில் இந்தியில் அதிக வசூல் மழையை குவித்த திரைப்படங்களில் இந்த திரைப்படத்திற்குத்தான் முதலிடம். இதுவரையில் சுமார் 280 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இரண்டு மொழிகளில் ஒரே கதையைக் கொண்ட திரைப்படத்தை உருவாக்கி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் அடுத்து இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் தவமிருக்கின்றனர். ஆனால், இவர் மீண்டும் இந்தி திரைத்துறைலேயே ஒரு திரைப்படம் இயக்கவே விரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில், மீண்டும் தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்கினால் வருமானத்தில் ஐம்பது சதவீதம் தருவதாக கபீர் சிங் திரைப்படத்தைத் தயாரித்த சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முராத் கேதானி கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்தியில் மீண்டும் சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திரைப்படத்தை இயக்க சந்தீப் ரெட்டி வங்கா சம்மதித்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு இந்தியின் முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!