Just In
- 24 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 2 hrs ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோச்சடையான் படப்பிடிப்பு மார்ச் 15-ல் ஆரம்பம்!
ரஜினி நடிக்கும் 'கோச்சாடையான்' பட வேலைகளில் மும்முரமாக உள்ளது படக்குழு.
சமீபத்தில் இந்தப் படத்துக்கு வீட்டிலேயே பூஜை போடப்பட்டு, ரஜினியை மேக்கப் சேரில் அமர வைத்து விதவிதமாக படங்கள் எடுத்தனர். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தப் பட்டது.
வருகிற 15-ந்தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர். அன்றைய தினம் ரஜினியும் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேயும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
பின்னர் படக் குழுவினர் லண்டன் புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு மூன்று வாரம் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ஹாலிவுட் ஸ்டண்ட் நிபுணர்களை வைத்து ரஜினியின் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.
இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர். கிராபிக்ஸ் மூலம் நாகேசின் நகைச்சுவை காட்சிகளும் படமாவதாகக் கூறப்படுகிறது.
3 டி அனிமேஷனில், Performance capturing உத்தியில் தயாராகும் இப்படத்தில், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, ருக்மணி, நாசர் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். சௌந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டிலேயே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.