Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும்...கன்ஃபார்ம் செய்த எஸ்.ஜே.சூர்யா
சென்னை : டாப் டைரக்டராக இருந்து, தற்போது டாப் வில்லன் நடிகராக மாறி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. பல டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாகவும் சில படஙகளில் நடித்து வருகிறார்.
2016 ம் ஆண்டு சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன், தற்போது கடமையை செய் என்ற படத்தை இயக்கி உள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Recommended Video
தயாரிப்பாளர் ரமேஷ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரஸ் ரிலீஸ் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தில் நடித்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், தயாரிப்பாளர் ரமேஷ் மிகவும் திறமையானவர். அவரின் கடின உழைப்பால் தான் இந்த படம் உருவானது. இந்த படத்தின் கதையை வெங்கட் என்னிடம் சொன்ன போது, இது எவ்வளவு முக்கியமான ஒன்று என புரிந்து கொள்ளவில்லை.
இவங்க தான் என் வாழ்க்கை...தனுஷ் யாரை இப்படி சொல்லி இருக்கார் தெரியுமா?
இது போன்ற விஷயங்களை நான் செய்தது இல்லை. இந்த படத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடித்துள்ள கேரக்டர் மிகவும் வித்தியாசமான ஒன்று.கோமா நிலையில் இருப்பது என்னுடைய கேரக்டர்.
நான் அமைதியாக இருக்க வேண்டும். அதே சமயம் எனது நடிப்பின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். டப்பிங் பேசும் போது கூட எனது வாய் மூடி இருக்க வேண்டும். தொண்டை மட்டும் அசைய வேண்டும். மிகவும் கஷ்டமான விஷயம் இது. என்னை இயக்கும் டைரக்டர்களுக்கு நான் முழு சுதந்திரம் கொடுப்பேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வேன். இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய ஹிட் ஆகும். இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்றார்.