Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்
மகனை நாயகனாக்கி தான் இயக்கி இருக்கும் கடமான்பாறை படம் மோசமானது என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
சென்னை: தனது மகன் நடிப்பில், தான் இயக்கி இருக்கும் கடமான்பாறை திரைப்படம் ஒரு மோசமான படம் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் 'கடமான்பாறை'. அவரது மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுராகவி, ஜெனி என படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகியிருக்கம் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டரை சென்னையில் நேற்று நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கடமான்பாறை ஒரு மோசமான படம் என்றார்.
என் மகன்:
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, " இது ஒரு மோசமான படம் என்று தான் நான் சொல்வேன். வேறு யாரையாவது நடிக்க வைப்பதற்கு பதிலாக எனது மகன் அலிகான் துக்ளக்கை நடிக்க வைத்துள்ளேன்.
சூரப்பன்:
படத்தில் நான் ஆதிவாசியாக நடிக்கிறேன். ஒரு காட்டையே எனது காட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரப்பன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை மீறி அந்த காட்டில் இருந்து யாராலும் எதுவும் செய்ய முடியாது. செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது.
திகிலூட்டும் காட்சிகள்:
காட்டிலிருந்து எந்த பொருளையும் கடத்த விடாமல் தடுக்கும் என்னிடம் ஒரு காதல் ஜோடி மாட்டிக்கொள்கிறது. அவர்கள் என்னிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன், திகிலூட்டும் காட்சிகளை கொண்டு சொல்லியுள்ளோம்.
விரைவில் ரிலீஸ்:
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் இப்படம் திரைக்கு வரும்", என அவர் கூறினார்.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!