Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அந்த 50 நாள் வலி, கஷ்டம்: ஆர்யா படம் குறித்து கேத்ரீன் தெரஸா பேட்டி
சென்னை:
கடம்பன் படத்திற்காக கஷ்டப்பட்டது பணத்திற்காக அல்ல கதைக்காக என்கிறார் கேத்ரீன் தெரஸா.
ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரஸா நடித்துள்ள கடம்பன் படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. முதல் முறையாக ஆர்யா, கேத்ரீன் ஜோடியாக நடித்துள்னர்.
இந்நிலையில் படம் குறித்து கேத்ரீன் கூறும்போது,
மலைவாழ் பெண்
கடம்பன் படத்தில் நான் மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குனர் ராகவா கதை சொன்ன போதே இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று தெரிந்தது.
காடு
படம் முழுக்க காட்டுக்குள் தான் நடக்கும். மலைவாழ் பெண் என்பதால் காலில் செருப்பு போட முடியாது, காட்டுக்குள் மின்சாரம் இருக்காது, செல்போன் வசதியை எதிர்பார்க்கவே முடியாது என்று ராகவா கூறினார்.
கதை
கடம்பன் படத்தில் நடித்தால் நிச்சயம் கஷ்டப்படுவோம் என தெரிந்தே சம்மதித்தேன். இது பணத்திற்காக அல்ல மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லும் கதைக்காக.
வலி
கடம்பன் படத்திற்காக 50 நாட்கள் வலி, கஷ்டத்துடன் நடித்தேன். மலைவாழ் மக்கள் வாழ்நாள் முழுவதும் வலியை தாங்கிக் கொண்டு கஷ்டப்படும்போது என் கஷ்டம் பெரிதாகத் தெரியவில்லை என்றார் கேத்ரீன்.