Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கடன்...வைரமுத்துவின் நாட்படு தேறலின் ஏழாம் பாடல் மே 29 ம் வெளியீடு
சென்னை : கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறலில் இரண்டாம் பாகத்தில் கடன் என்ற தலைப்பில் அடுத்த பாடல் மே 29 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த வித்தியாசமான பாடல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் 7500 பாடல்கள் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து, தனது புதிய முயற்சியாக நாட்படு தேறல் என்ற தலைப்பில் பாடல்கள் எழுதி வருகிறார். தனது வரிகளில் 100 பாடல், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 டைரக்டர்கள் என நாட்படுதேறல் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாகம் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நாட்படு தேறலின் இரண்டாம் பாகம் வெளியாகி வருகிறது. இதில் 6 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், ஏழாவது பாடல் கடன் என்ற தலைப்பில் மே 29 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இசையருவி சேனலில் பகல் 1.30 மணிக்கும், கலைஞர் டிவியில் மாலை 5.30 மணிக்கும் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4 தொடரில் நெட்ஃபிலிக்ஸ் எடுத்த அதிரடி முடிவு
ஆடு மேய்க்கக் கடன் வாங்கினான் ஒரு கிராமத்து கிழவன். ஆட்டை அவன் மேய்த்தான் வட்டி அவனை மேய்ந்தது. கடன் வாங்கி வாங்கிக் காலொடிந்ததுதான் வங்கி ஆயிற்றோ என கவிஞர் வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார். இதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாட்டுப்புற பாணியில் ஆடு மேய்ப்பவர் துன்பம் கூறியது அருமை. உங்களால் மட்டுமே காதலில் இருந்து கடனாளியின் கஷ்டம் வரை பாட இயலும் ஐயா என பலர் பாராட்டி வருகின்றனர்.
கடன்பட்ட கதையை மண்மனம் மாறாத சோகத்தோடு பதிவிட்டிருக்கும் கடன் சுமை நெஞ்சில் பாரமாய் அழுத்துகிறது. காட்சியும் வாழ்வியல் சாட்சியும் பிரம்மாண்டமாய் விரிகிறது வெள்ளித்திரையில். கவிப்பேரரசின் அற்புதமான கவிதை. கிராமத்து பாணியில் வைரமுத்து எழுதி உள்ள வரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.