Don't Miss!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்!
காதல் பட புகழ் நடிகர் பல்லு பாலு சாலையோரங்களில் படுத்து கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் காதல் விருச்சிககாந்த் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கோவில் வாசல்களில் பிச்சை எடுப்பது தெரிய வந்துள்ளது.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த படம் காதல். இந்த படத்தில் விருச்சிககாந்த் எனும் வேடத்தில் நடித்திருப்பார் பல்லு பாலு. ஒரேகாட்சி தான் என்றாலும் அவரது கதாபாத்திரம் இன்றளவும் அனைவரது நினைவிலும் இருக்கக் கூடியதாக இருக்கும்.
"அமெரிக்க மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம் ஸ்ரெயிட்டா ஹீரோ தான். அப்புறம் அரசியல், பிறகு சிஎம், டெல்லி.. அது போதும்"என அவர் பேசிய வசனத்தை வைத்து பல மீம்ஸ்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் காதல் படத்திற்கு பிறகு பல்லு பாலுவிற்கு தான் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் அவர் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தார். பெற்றோரும் இறந்து போனதால், அனாதையாக அலைந்து திரிந்திருக்கிறார்.
மன இறுக்கத்தால் தவித்துக்கொண்டிருந்த காதல் விருச்சிககாந்துக்கு உதவிய நடிகர் - வீடியோ
இதுகுறித்து அப்போது செய்தி வெளியானதை தொடர்ந்து, பல்லு பாலுவுக்கு தோள் கொடுத்து உதவினார் வில்லன் நடிகர் சாய் தீனா. இதனால் அவரால் சிறிது காலம் தள்ள முடிந்தது. ஆனால் மதுப்பழக்கத்தை கைவிட இயலாமல், இப்போது அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை வடபழனி அருகே சாலையோரத்தில் பல்லு பாலு படுத்து தூங்கியதை சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கோவில் வாசல்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவர். லேசாக மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
முன்பு மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்காக பல்லு பாலுவை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார் சாய் தீனா. ஆனால் அங்கிருந்து தப்பிச் சென்ற பாலு, தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகவே வாழ்ந்து வருகிறாராம். மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டால் மட்டுமே பல்லு பாலுவுக்கு நல்லது நடக்கும் என்கின்றனர் அவரது நண்பர்கள்.