Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போதைப் பொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது: நடிகரிடம் 11 மணிநேரம் விசாரணை
ஹைதராபாத்: போதைப் பொருள் வைத்திருந்ததற்காக நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜானி ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜராக உள்ளவர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி. அவருக்கும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ என்று ஹைதராபாத் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
கஞ்சா
ஜானி ஜோசபின் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ஜானி ஜோசபை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நவ்தீப்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நவ்தீப் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 11 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
போதை
எனக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. மேலும் போதைப் பொருள் பயன்படுத்தும், விற்பனை செய்யும் யாருடனும் தொடர்பும் இல்லை என்கிறார் நவ்தீப்.
குற்றவாளி
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜீஷான் அலி கானுடனான தொடர்பு குறித்து நவ்தீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கானை இவென்ட் மேனேஜராக மட்டுமே தெரியும் மற்றபடி எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று நவ்தீப் தெரிவித்துள்ளார்.