Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்போ உனக்கு திருமணம் எதற்கு?: நடிகையிடம் பேசுவதை நிறுத்திய தந்தை
மும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்ய நடிகை கஜோலின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருந்திருக்கிறது.
பாலிவுட் நடிகை கஜோல் கெரியரின் உச்சத்தில் இருந்தபோது 1999ம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நியாசா(15) என்ற மகளும், யுக்(8) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தனது திருமணம் பற்றி பேசியுள்ளார் கஜோல். அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
எதிர்ப்பு
நானும், அஜய் தேவ்கனும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றதும் பலரும் வேண்டாம் என்றார்கள். நான் திருமண பேச்சை துவங்கியதும் என் தந்தை என்னுடன் ஒரு வார காலமாக பேசவே இல்லை. நான் திருமணம் செய்வது பிடிக்காததால் என் தந்தை பேசவில்லை. உனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது, கெரியர் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலா திருமணம் செய்யப் போகிறாய் என்று என் தந்தை கேட்டார். ஆம் எனக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று பதில் அளித்தேன்.
குணம்
அஜய்யும், நானும் வித்தியாசமானவர்கள். அதனால் நாங்கள் திருமணம் செய்தால் ஒத்து வராது என்றே பலர் நினைத்தனர். நாங்கள் ஒன்றாக இருப்பதை பலரும் பார்த்தது கிடையாது. அதனால் எங்களுக்கு இடையே செட் ஆகாது என்றே முடிவு செய்துவிட்டனர். எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி தான் திருமணம் செய்து கொண்டோம்.
குழந்தைகள்
எங்களுக்கு இடையே வித்தியாசங்கள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒரே ஆளாக ஆகிவிட்டோம். எங்களின் குழந்தைகள் தான் எங்களின் கைகள் என்கிறார் கஜோல்.
கஜோல்
அஜய் தேவ்கன் கஜோலை காதலிப்பதற்கு முன்பு தனது சகோதரியின் திருமணத்திற்கு அழைக்க அவருக்கு போன் செய்து கஜோலா என்று கேட்டுள்ளார். அதற்கு கஜோலோ இல்லை இது ஸ்ரீதேவி, ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டாராம்.