ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. விஜயகாந்த் சமாதியில் கலங்கி நின்ற கலா மாஸ்டர்!
சென்னை: கலா மாஸ்டர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் 15 லட்சம் பேர்: இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை விஜயகாந்த் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைந்த விஷயம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியளவில் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக பிரேமலதா தெரிவித்து இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்தார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, அதில் இருந்து தேறி விஜயகாந்த் வீடு திரும்பி டிசம்பர் 14ந் தேதி நடித்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் 15 லட்சம் பேர்: இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை விஜயகாந்த் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைந்த விஷயம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியளவில் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக பிரேமலதா தெரிவித்து இருந்தார்.

மிஸ் யூ கேப்டன்: விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதையடுத்து, கலா மாஸ்டர், கேப்டன் விஜயகாந்த அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உள்ளார். அது மட்டுமில்லாமல், விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கலா மாஸ்டர், நான் சென்னை வந்தவுடன் நேராக கேப்டனின் இறுதி ஊர்வலத்திற்கு சென்றேன். அத்தகைய நம்பமுடியாத மனிதனின் மரணத்தைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. நான் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். மிஸ் யூ கேப்டன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











