Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்
திருவனந்தபுரம்: தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான கலாபவன் மணி நேற்றிரவு கல்லீரல் பிரச்சினை காரணமாக மரணமடைந்தார்.
அக்மார்க் மலையாள நடிகர் என்றாலும் தமிழிலும் தன் பாணியில் அசத்தியவர் மணி. இவரின் காமெடி கலந்த வில்லத்தனம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று.
மறுமலர்ச்சி தொடங்கி பாபநாசம் வரை கலாபவன் மணியின் மறக்க முடியாத படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
மறுமலர்ச்சி வேலு
மறுமலர்ச்சி படம் தான் கலாபவன் மணியின் முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் சக மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.1998 ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியான மறுமலர்ச்சி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை வென்ற இப்படத்தில் வேலு என்னும் டிரைவராக மணி நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் மணியின் பேச்சால் ஊருக்குள் மிகப்பெரிய கலவரம் உண்டாகும். அதனால் மம்முடியிடம் இருந்து தப்பிக்க பெண் வேடமெல்லாம் போட்டு நடிப்பில் அசத்தியிருப்பார்.
ஜெமினி
4 வருட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் மணி மீண்டும் நடித்த படம் ஜெமினி. இப்படத்தில் தேஜா என்னும் வடசென்னை ரவுடியாக நடிப்பில் கலக்கியிருப்பார். ஜெமினி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு மணியும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகள், 50 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் விருதை கைப்பற்றினார்.
குத்து
2004 ம் ஆண்டு சிம்பு, ரம்யா நடிப்பில் வெளியான குத்து படத்தில் வில்லத்தனம் கலந்த அப்பாவாக மணி நடித்திருந்தார். படம் முழுவதும் நகைச்சுவை கலந்து இவர் காட்டிய வில்லத்தனம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குத்துவை சூப்பர் ஹிட்டாக மாற்றியதில் கலாபவன் மணிக்கும் ஒரு பெரிய பங்குண்டு. இதேபோல ஜெயம் ரவியின் மழை படத்திலும் வில்லத்தனம் கலந்த அப்பாவாக இவர் கலாபவன் மணி நடித்திருந்தார்.
ஆறு, வேல்
சூர்யாவின் நடிப்பில் முக்கியப் படங்களான ஆறு, வேல் போன்ற 2 படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. குறிப்பாக ஆறு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பில் அசத்தியிருப்பார்.
ரஜினி, கமல்
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் ரஜினி, கமல் இருவரின் படங்களிலும் மணி நடித்திருக்கிறார். எந்திரன் படத்தில் மணி செய்தது சிறிய பாத்திரம் என்றாலும் கூட, இவரின் நடிப்பைப் பார்த்து கலாபவன் மணி மிகப்பெரிய நடிகன் என்று ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இதேபோல பாபாநாசம் படத்தில் கமலை கொலை வழக்கில் மாட்டிவிடத் துடிக்கும் கான்ஸ்டபிள் பெருமாளாக நடித்திருப்பார். கமலின் பாபநாசம் தான் கலாபவன் மணியின் கடைசிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?