Don't Miss!
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- News அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்.. இதுதான் எங்க தமிழ்நாடு.. நாட்டிற்கே உதாரணமாய் மாறிய தஞ்சாவூர் திருவிழா
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு: கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி
கொச்சி: நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கலாபவன் மணியின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கு மாநில போலீசாரிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை எந்த தெளிவும் ஏற்படவில்லை.
திலீப்
கலாபவன் மணியின் அண்ணன் ராமகிருஷ்ணன் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நிலம்
மணிக்கும், திலீப்புக்கும் இடையே நில விவகாரம் தொடர்பான டீலிங் இருந்தது. என் சகோதரரின் மரணத்திற்கு பின்னால் யார் உள்ளார்கள் என்று தெரியவில்லை என்கிறார் ராமகிருஷ்ணன்.
சிபிஐ
திலீப்புடனான நில டீலிங் குறித்து நான் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். மணி மரணம் குறித்த விசாரணைக்கு திலீப் ஒத்துழைக்கவே இல்லை. நல்ல நண்பராக இருந்தும் மணி இறந்த பிறகு ஒரேயொரு முறை தான் திலீப் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீதி
மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருந்தால் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ணன். கலாபவன் மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு உள்ளது என்று இயக்குனர் பைஜுவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.