Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கலாபவன் மணி மர்ம மரணம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேரள முதல்வரிடம் கோரிக்கை!
கொச்சி: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மலையாள, தமிழ் நடிகரான கலாபவன் மணி திருச்சூரில் உள்ள பண்ணை இல்லத்தில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடலில் உயிரைக் கொல்லும் பூச்சிகொல்லி கலந்திருந்ததாக கொச்சி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட உடல்கூறு பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஹைதராபாத் உள்ள ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில் கலாபவன் மணியின் ரத்தத்தில் விஷம் கலந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் அருந்திய மதுவில் விஷம் இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கலாபவன் மணியின் குடும்பத்தினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது கலாபவன் மணி மரணம் குறித்து மாநில போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.