Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு
நேற்றைய தினம் நடிகை மரணம், இயக்குநர் தற்கொலை போன்ற செய்திகள்தான் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது. மதிய நேரத்தில் கனகா மரணச் செய்தி பரபரப்பானது. பின்னர் கனகாவே ஊடகங்களின் முன்பு தோன்றி பேசி தெளிவு படுத்தினார்.
அதேபோல் கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக மாலை நாளிதழ்கள், சில தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தி ஒளிபரப்பானது.
இந்த செய்தியைப் பார்த்துப் பதறிப் போன கபிலன், நம்மைத் தொடர்பு கொண்டு, நாளிதழ்களில் தவறான செய்தியைப் போட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது நான் சென்னையில்தான் இருக்கிறேன். கலைந்த கனவுகள் படப்பிடிப்பு லொகேசன் பார்ப்பதற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் புதன்கிழமையன்று நாமக்கல் செல்ல உள்ளதாகவும் கூறினார்.
ஆகஸ்ட் 8ல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இயக்குநர் கபிலன் தெரிவித்தார். இதுபோன்ற தவறான செய்திகளைப் போடுவதன் மூலம் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அவர் கூறினார்.
மறைந்த நடிகர் கே.ஏ. தங்கவேலுவின் பேரன் அஸ்வின் அறிமுகமாகும் படம் கலைந்த கனவுகள் என்பது நினைவிருக்கலாம்.