Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கலைஞர் டிவி விஜே அடிச்சிடுச்சு லக்கு!
சென்னை : கலைஞர் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் தணிகை, அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு தயாரித்து இயக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை குயின்ஸ்லி.
பல படங்களுக்கு துணை மற்றும் இயக்குனராகவும், பல குறும் படங்களையும் இயக்கியுள்ள நியூட்டன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படம் ஒரு ரொமான்டிக் சைக்கோ திரில்லர் திரைப்படத்தின் வகையை சார்ந்ததாக இருக்க போகிறது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் விஜய் தொலைக்காட்சி புகழ் பாண்டி கமல். இவர்களுடன் பல பிரபலமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
பெயரிடப்படாத இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை இசையமைக்க உள்ளார் சித்தார்த்தா பிரதீப் . மலையாள திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இந்த திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வி ஜே தணிகை இதற்கு முன்னரே 'தடம்' மற்றும் 'குற்றம் 23' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான்.
நியூட்டன் பிரபு படங்களை இயக்குவதற்கு முன்னர் பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றினில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்துள்ளார். இப்படி தனது முந்தய அனுபவங்கள் மூலமும் நண்பர்களுடன் ஒன்று இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
படத்தின் பூஜை நிகழ்வு சமீபத்தில் வளசரவாக்கத்தில் உள்ள சாய் பாபா கோவிலில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த ரோபோ ஷங்கர், ஜாக்குவார் தங்கம், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
தற்போது தணிகை இப்படத்தினை தொடர்ந்து 'தொடுப்பி ' எனும் படத்தில் ஹீரோவாக' நடித்துவருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதையே மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை தூண்டி விட்டுள்ளது. திரில்லர் திரைப்படம் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.