Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதெல்லாம் ஒரு பொதுக்குழுவா... நாங்கதான் உண்மையான தயாரிப்பாளர் சங்கம் - கலைப்புலி தாணு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உடைந்துள்ளது. அதிருப்தி கோஷ்டியினர் சென்னையில் நேற்று போட்டி பொதுக்குழுவை கூட்டி சங்கத்தின் தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாதங்கள் சங்கத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தனர்.
இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான அட்ஹாக் கமிட்டிக்கும் அங்கீகாரம் வழங்கினர்.
ஆனால் இதை எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தங்களை நீக்க இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேன்னப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு விதிமுறைப்படி கூட்டப்படவில்லை. செயற்குழு அனுமதியில்லாமல் கூட்டப்பட்டு உள்ளது. அதில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. எனவே எங்களையும் எஸ்.ஏ.சந்திரசேகரனையும் நீக்கியது செல்லாது.
ஏற்கனவே சங்கத்தின் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து விட்டதாகக் கூறினர். ஆனால் ராஜினாமாவை அவர்கள் வாபஸ் பெற்றுவிட்டனர். அப்புறம் அட்ஹாக் கமிட்டி எங்கே வந்தது.
ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்ட எடிட்டர் மோகன், கோவை தம்பி, தேனப்பன், மனோஜ்குமார், அமுதா துரைராஜ், சங்கிலிமுருகன், பவித்ரன், ராதாரவி, ஆர்.மாதேஷ் கப்பார், சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன் ஆகியோரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை.
எனவே இந்த பொதுக்குழு சட்டத்துக்கு உட்படாதது. அவர்கள் முடிவை பொருட்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். பதவிக்காலம் உள்ளவரை நாங்கள் இருப்போம். நாங்கள் நியமித்த குழுவினர்தான் பெப்சியுடன் சம்பள பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்," என்றனர்.
இதன் மூலம், யாருடன் சம்பளப் பிரச்சினை குறித்து பேசுவது என்ற குழப்பம் பெப்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.