Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'திருட்டு வீடியோவைப் பார்க்காதீங்க.. ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள்!'
சென்னை: கபாலி பற்றி திருட்டு வீடியோவாக எந்தக் காட்சி வந்தாலும் உடனே அதைப் பார்த்து பகிர்வதைத் தவிருங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கேட்டுக் கொண்டுள்ளார்.
கபாலி படத்தின் ஒரு நிமிட திருட்டு வீடியோ நேற்று இரவு வெளியாகியுள்ளது. ரஜினிக்கு நேற்று போடப்பட்ட சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் இந்த கேவலமான காரியத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.
அதே நேரம் படத்தின் வேறு காட்சிகள் எதுவும் வெளியாகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் கலைப்புலி தாணு.
இந்த திருட்டு வீடியோ குறித்து தாணு கூறுகையில், "கபாலி படம் திருட்டு வீடியோவாக வராமல் தடுக்க வேண்டிய ஏற்பாடுகளை டெல்லி வரை சென்று செய்துவிட்டோம். மத்திய அரசு திருட்டு வீடியோவைத் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினி சாருக்கு போடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது ஒரு நிமிடக் காட்சியை பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அந்த நபரை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்.
ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள்... என்னதான் திருட்டு வீடியோ வெளியானாலும், ரஜினி படத்தை, அவரது அறிமுகக் காட்சியை தியேட்டரில் காணும் அனுபவம் கிடைக்குமா? எனவே இதுபோன்ற வீடியோக்கள் எதையும பார்க்காதீர்கள், சமூக வலைத் தளங்களில் பகிராதீர்கள். நாளை திரையில் பார்த்து ரசியுங்கள்," என்றார்.