Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சிவாஜியை கலாய்த்து நிகழ்ச்சி நடத்துவதா? நடிகர் பிரபு கோபம்.. 'கலக்கப் போவது யாரு' டீம் மன்னிப்பு!
சென்னை: சிவாஜி கணேசனை கலாய்த்து நிகழ்ச்சி நடத்தமாட்டோம் என்று கலக்கப் போவது டீம் பிரபுவிடம் உறுதி அளித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், கலக்கப் போவது யாரு. காமெடி நிகழ்ச்சியான இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் பல நடிகர், நடிகைகளை கிண்டல் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம்.
கிண்டல் செய்து
இந்த நிகழ்ச்சியில், பிரபல நடிகர் சிவாஜி கணேசனை கிண்டல் செய்வது போல நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனால், சிவாஜி கணேசன் ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவும் கடும் கோபம் அடைந்தார். இதனால் அவர் அந்த சேனலில், இந்த நிகழ்ச்சியை தயாரிப்பவர்களிடம் பேசினார்.
எல்லை இருக்கணும்
இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நிகழ்ச்சித் தரப்பில், இது தொடர்பாக அவர் பேசியும் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, நடிகர்களை மிமிக்ரி செய்யும்போது ஒரு எல்லையோடு இருக்க வேண்டும்.
என்ன நினைப்பார்கள்
விஜய் டிவி நிகழ்ச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நடித்த சிவாஜி கணேசனை, சங்கடப்படும்படியாகக் கிண்டல் செய்கின்றனர். அதுவும் மக்களிடம் அதிகமாக சென்றடையும் நிகழ்ச்சி அது. அதில் கிண்டல் செய்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள், சிவாஜி பற்றி என்ன நினைப்பார்கள்?
பிரபுவிடம் மன்னிப்பு
அதனால் கண்டனம் தெரிவித்தோம். ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்தனர். இதையடுத்து அந்த நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினர், இனி அது போன்று நடக்காது என்று உறுதி அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய், ஆதவன், நிகழ்ச்சி இயக்குநர் தாம்சன் ஆகியோர் நடிகர் பிரபுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.