"கத்தி"யால் ஆறப் போட்ட "களவாடிய பொழுதுகளை" கையில் எடுக்கும் ஐங்கரன்!
சென்னை: தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா மற்றும் பூமிகா நடிப்பில் தயாராகி உள்ள படம் களவாடிய பொழுதுகள்.
நீண்ட காலத்திற்குப் பின் பிரபுதேவா மற்றும் பூமிகா நடித்துள்ள இப்படத்தை மக்கள் அதிகம் எதிர்பார்த்த போதும், சிலப்பலக் காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.
ஆனால், தற்போது இப்படப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தள்ளிப் போன ரிலீஸ்...
கடும் நிதி நெருக்கடி மற்றும் சரியான விலை கிடைக்காதது ஆகிய காரணங்களால் படத்தை தயாரித்த ஐங்கரன் களவாடிய பொழுதுகளை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.

நல்ல விலை...
இதற்கிடையே, லைகாவுடன் இணைந்து கத்தியை தயாரித்துள்ளது ஐங்கரன். எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தபோதும், கத்தி நல்ல விலை போயுள்ளதாகத் தெரிகிறது.

கத்தி லாபத்தில்...
எனவே, அதன் லாபத்தைக் கொண்டு களவாடிய பொழுதுகள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் ரிலீஸ்...
விரைவில் அப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











