Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்
படத்திற்கு சம்மந்தமே இல்லாத சிலர், படத்திற்கு தடை வாங்கியிருப்பதாக களவாணி 2 திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: களவாணி 2 திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார்.
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் களவாணி 2. இத்திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
களவாணி 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தான் இந்த தடை பெறப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 10ம் தேதி வரை களவாணி 2 திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Scoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில், தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "வழக்கு தொடர்ந்த குமரன் என்பவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரை எனக்கு தெரியவே தெரியாது. கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால், அதை தடுக்க நிறைய பேர் கிளம்பி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திடீரென தடை வாங்குகிறார்கள்.
எனக்கு நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் மதிக்கும் நீதிமன்றம், எனக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன்", என சற்குணம் தெரிவித்துள்ளார்.