Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்
படத்திற்கு சம்மந்தமே இல்லாத சிலர், படத்திற்கு தடை வாங்கியிருப்பதாக களவாணி 2 திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: களவாணி 2 திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார்.
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் களவாணி 2. இத்திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
களவாணி 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தான் இந்த தடை பெறப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 10ம் தேதி வரை களவாணி 2 திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Scoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில், தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "வழக்கு தொடர்ந்த குமரன் என்பவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரை எனக்கு தெரியவே தெரியாது. கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால், அதை தடுக்க நிறைய பேர் கிளம்பி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திடீரென தடை வாங்குகிறார்கள்.
எனக்கு நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் மதிக்கும் நீதிமன்றம், எனக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன்", என சற்குணம் தெரிவித்துள்ளார்.