Don't Miss!
- News பிரச்சாரத்தின்போது திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Technology டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்
படத்திற்கு சம்மந்தமே இல்லாத சிலர், படத்திற்கு தடை வாங்கியிருப்பதாக களவாணி 2 திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: களவாணி 2 திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் சற்குணம் விளக்கம் அளித்துள்ளார்.
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் களவாணி 2. இத்திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
களவாணி 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தான் இந்த தடை பெறப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 10ம் தேதி வரை களவாணி 2 திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Scoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில், தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "வழக்கு தொடர்ந்த குமரன் என்பவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரை எனக்கு தெரியவே தெரியாது. கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால், அதை தடுக்க நிறைய பேர் கிளம்பி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திடீரென தடை வாங்குகிறார்கள்.
எனக்கு நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் மதிக்கும் நீதிமன்றம், எனக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறேன்", என சற்குணம் தெரிவித்துள்ளார்.