Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
களவாணி தலைப்புக்காக மோதிக் கொள்ளும் இயக்குநர் தயாரிப்பாளர்!
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் ஏ சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'களவாணி' திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த 'எத்தன்' படத்தைத் தயாரித்து வெளியிட்டது இந்த நிறுவனம்.
தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் 'வதம்' படத்தைத் தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் அதே களவாணி டீமை வைத்து களவாணி 2 படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார் சற்குணம். அந்தப் படத்துக்கு கே 2 என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக்கையும் சிவகார்த்திகேயனை வைத்து வெளியிட்டார். விமல், ஓவியா நடிக்கிறார்கள்.
உடனே அதற்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில் களவாணி 2 படத்தை தாங்களே தயாரிக்கப் போவதாக ஷெராலி பிலிம்ஸ் நசீர் அறிவித்துள்ளார். 'களவாணி 2' படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.