Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் ஆம்ஆத்மி மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எஸ்.தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது "கள்ளத்துப்பாக்கி" தயாரிப்பாளர் கொலை மிரட்டல் புகார்
சென்னை விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி என்ற ரவிதேவன் (வயது 39). இவர் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், "நான், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சினிமா படம் ஒன்றை தயாரித்து வருகிறேன். இந்த படம் வெளிவரும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஒன்றை, எஸ்.தாணு தயாரித்து வருகிறார். துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்த, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நான் தடை ஆணை பெற்றுள்ளேன்.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளர் எஸ்.தாணுவும், அடியாட்களை ஏவிவிட்டு, என்னை மிரட்டுகிறார்கள். செல்போன் மூலமும் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்குமாறு வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.