நெருப்புடா.. நெருங்குடா.. யாருடா?... கல்பனா அக்காடா.. அடடா!
சென்னை: கல்பனா அக்கா.. எல்லாரும் இவரை இப்படித்தான் பாசத்தோடும், அன்போடும் கூப்பிட்டுப் பழகி விட்டனர். அந்த கல்பனா அக்கா இப்போது டெர்ரராக ஒரு பாட்டைப் பாடி இன்டர்நெட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார்.
கல்பனா பாலேஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழ்ப் பெண். பாட்டுப் பாடுவதில் இவரை அடிச்சுக்கு ஆளே கிடையாது ஆளே கிடையாது. அட்டகாசமான பாடல்களை கூட அட்டுத்தனமாக பாடி அலங்க மலங்க விழிக்க வைத்து சிரிப்புக் காட்டுவதில் கல்பனாதான் இப்போதைக்கு இந்த பூமிப் பந்திலேயே ரொம்பப் பிரபலம்.
இப்போதும் கூட பாருங்க, நமக்காக "நெருப்புடா, நெருங்குடா"ன்னு... நம்மையெல்லாம் எப்படி நொறுங்க வைக்கிறார் பாருங்கள்...!


Click it and Unblock the Notifications











