கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்… போட்டி போட்டு வாழ்த்திய ரசிகர்கள் !
சென்னை : கல்யாண வீடு சீரியலில் நடித்த அஞ்சனாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஏராளமான ரசிகர்கள்
பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக திரைப்படங்களை விட சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு திரைப்படங்களுக்கு நிகராக ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை பரபரப்பாக வைத்துள்ளனர்.

பொழுதுபோக்கு
அனைத்து சீரியல்களிலும் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் முன்விரோதம் பொறாமை ஆகியவற்றை மையமாக வைத்து கதைகளை நகர்த்தி வருகின்றனர். மேலும் இல்லத்தரசிகளின் மிகப்பெரிய பொழுதுபோக்கே சீரியலாகி விட்டது.
Recommended Video

முடிந்தது
சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற மெட்டிஒலி, நாதஸ்வரம் சீரியல்களை இயக்கியவர் திருமுருகன். ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த இவர் கல்யாண வீடு சீரியலில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்தார். அந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

நிச்சயதார்த்தம்
இந்த சீரியலில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அஞ்சனாவிற்கு திருமண யோகம் கைகூடி வந்து தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











