Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவகார்த்திகேயன், சிம்பு: டாப் கியரில் செல்லும் கல்யாணி ப்ரியதர்ஷன்
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.
பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகளான கல்யாணி தாய் வழியில் நடிகையாகியுள்ளார். தெலுங்கில் அறிமுகமான வேகத்தில் பிசியான நடிகையாகிவிட்டார்.
இந்நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடி கல்யாணி தான்.
திருமணமான 4 மாதத்தில் கணவரை பிரியும் நடிகை ப்ரியங்கா சோப்ரா?
சிம்பு
ஹீரோ படம் மூலம் கோலிவுட் வந்துள்ள கல்யாணிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்யாணி
மாநாடு படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கல்யாணி தெரிவித்துள்ளார். மாநாடு குறித்த அறிவிப்பை பார்த்த சிம்பு ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பர் என்று கூறி அவர்களே ஒரு புகைப்படத்தை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.
துல்கர் சல்மான்
கல்யாணி துல்கர் சல்மானுடன் சேர்ந்து வான் படத்தில் நடிக்கிறார். தமிழில் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.
வீண் பேச்சு
நான் அந்த நடிகையின் இடத்தை பிடித்துக் காட்டுகிறேன், அவரை காலி செய்கிறேன் என்று வீராப்பு பேசிய வாரிசு நடிகையின் மார்க்கெட் டல் அடித்துள்ளது. இந்த நேரத்தில் கல்யாணி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். யாரையும் விரட்டிக் காட்டுகிறேன் என்று அவர் கூறவில்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார்.